சிறுமியின் கருமுட்டைகளை விற்ற நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

சிறுமியின் கருமுட்டைகளை விற்ற நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது

1 mins read
6bc23254-58b9-4d1d-b049-0865f69d9062
-

சென்னை: பதி­னாறு வயது சிறுமியைச் சீர­ழித்து, கரு­முட்டை­களை­யும் விற்­பனை செய்த நான்கு பேர் மீது குண்­டர் சட்­டம் பாய்ந்­தது.

சிறு­மி­யின் தாயே இத்­த­கைய இழி­வான செய­லில் ஈடு­பட்­டுள்­ளார்.

ஈரோட்­டில் நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வம் குறித்து அண்­மை­யில்­தான் தக­வல் வெளி­யா­னது. பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யைப் பெற்­றெ­டுத்த தாயே,மேலும் மூன்று பேரு­டன் இணைந்து மக­ளி­டம் இருந்து எடுக்­கப்­பட்ட கரு­முட்­டை­களைத் தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் விற்­பனை செய்து வந்­தார்.

காவல்­து­றை­யி­டம் சிக்­கிய பிறகே இந்­தக் கும்­ப­லின் அட்­டூ­ழி­யச் செயல் அம்­ப­ல­மா­னது. இதை­ய­டுத்து, நான்கு பேர் மீதும் போக்சோ சட்­டத்­தின்கீழ் நடவடிக்கை எடுக்­கப்­பட்­டது.

இவர்­க­ளி­டம் இருந்து சிறு­மி­யின் கரு­முட்­டை­களை வாங்­கிய தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

மேலும், இம்­ம­ருத்­து­வ­ம­னை­களில் காவல்­து­றை­யி­ன­ரு­டன் இணைந்து தமி­ழக அர­சின் மருத்­து­வம், ஊரக நலப்­ப­ணி­கள் இயக்­கத்­தின் தலை­வர் தலை­மை­யி­லான மருத்­து­வக் குழு­வி­ன­ரும் தொடர் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இவ்­வ­ழக்­கில் கைதாகி, சிறை­யில் அடைக்­கப்­பட்ட நான்கு பேர் மீதும் குண்­டர் சட்­டத்­தின்கீழ் நடவடிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மகள் என்­றும் பாரா­மல் சிறு­மி­யைக் கொடுமை செய்த அவ­ரது தாய் சுமையா, இடைத்­த­ர­கர் மாலதி உள்­ளிட்ட நான்கு பேருக்­கும் அதி­க­பட்ச தண்­டனை பெற்­று­தர வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.