எனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

எனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

2 mins read
3b8270c7-7a81-49ba-9635-4ef136de4bbe
-

சென்னை: அதி­முக பொதுக்­குழு கூட்­டப்­பட்­டது செல்­லாது என்ற நீதி­மன்­றத்­தின் தீர்ப்­புக்கு எதி­ராக எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பி­னர் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.

இத­னால் ஓ. பன்­னீர்­செல்­வ­மும் அந்த மேல்­மு­றை­யீட்டு வழக்­கில் தனது தரப்பு வாதத்­தைக் கேட்­காமல் உத்­த­ரவு பிறப்­பிக்­கக்­கூ­டாது என 'கேவி­யட்' மனு தாக்­கல் செய்துள்­ளார்.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வான­க­ரத்­தில் அதி­முக பொதுக்­குழு கூட்­டம் நடை­பெற்­றது.

அதில், கட்­சி­யின் இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­ச்சா­மியை தேர்வு செய்து தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதோடு ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பதவிகள் காலா­வ­தி­யா­கி­விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் அதி­முக பொதுக்­குழு முறைப்­படி கூட்­டப்­ப­ட­வில்லை, அது செல்­லாது என அறி­விக்­கக் கோரி ஓ.பன்­னீர்­செல்­வ­மும் பொதுக்­குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான வைர­முத்­து­வும் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­த­னர்.

உச்ச நீதி­மன்­றம் அந்த வழக்கை சென்னை உயர் நீதி­மன்­றத்­துக்கே அனுப்பி வைத்­தது.

அதன்­படி, வழக்கை விசா­ரித்த சென்னை உயர் நீதி­மன்­றம், ஜூலை 11ஆம் தேதி நடை­பெற்ற பொதுக்­குழு செல்­லாது என அதி­ர­டி­யாக அறி­வித்­தது.

"அதி­மு­க­வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்­டும்.

"ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் இணைந்­து­தான் பொதுக்­குழு, செயற்­கு­ழுவைக் கூட்ட வேண்­டும்.

"புதிய பொதுக்­கு­ழுவை மீண்டும் கூட்­ட­லாம். ஆனால் அதற்­காக சட்ட ஆணை­யர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டும். அது­வரை ஜூன் 23ஆம் தேதிக்கு முன்­பி­ருந்த நிலையே தொடர வேண்­டும்," என சென்னை உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யது.

இந்த நிலை­யில் தனி நீதி­ப­தி­யின் இந்த உத்­த­ரவை எதிர்த்து எடப்­பாடி பழ­னிச்­சாமி தரப்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதே சம­யத்­தில் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓபி­எஸ்­ஸும் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் 'கேவி­யட்' மனுத்­தாக்­கல் செய்­துள்­ளார்.

அதில், தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே மேல்­மு­றை­யீட்டு வழக்­கில் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்க வேண்­டும் என்று ஓபி­எஸ் குறிப்­பிட்டு உள்­ளார்.