நெல்லை: மறைந்த தமிழறிஞரும் பேச்சாளருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் வியாழன் அன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இராமச்சந்திரன், "தமிழகத்திற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு," என்றார். மறைந்த முதல்வர் காமராஜர் மீது மிகுந்த பற்றுக்கொண்ட நெல்லை கண்ணன், தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு மேடை தோறும் காமராஜரின் சிறப்புகள்
குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துவந்தார்.