சென்னை: பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது என புதிய வாகன விதி முறை அறிவுறுத்துகிறது.
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்கக் கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.
நடத்துநரின் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப் படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சமிக்ஞை காட்டுவது உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளிலும் மேற்கண்டவாறு திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

