சேலம்: மேட்டூரில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அணையின் முக்கியப் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். பின்னர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் எனும் ஆடவர் மது போதையில் மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

