1,055 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் அரசு

1,055 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் அரசு

2 mins read
01e92ea9-5af5-4e2d-8a26-dc06be5e440f
-

அமைச்சர்: பிற மாநிலத்தவர்கள் வியக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன

சென்னை: நீர்­நி­லை­க­ளைத் தூய்­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை சென்­னை­யில் துரித கதி­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், சென்­னை­யில் 1,055 கிலோ மீட்­டர் நீளத்­திற்கு மழை நீர் வடி­கால் அமைக்­கப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"சென்­னை­யில் 16 நீர்­நி­லை­கள் இருந்­தன. இந்த நீர்­நி­லை­களில் கலந்துள்ள கழி­வு­நீரை அகற்றி அவற்றை மீண்­டும் தூய்­மைப்­படுத்தி நீர்­நி­லை­க­ளாக மாற்­றும் பணி­கள் முத­ல­மைச்­சர் உத்­த­ர­வின் பேரில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. சென்­னை­யில் மழை நீர் வடி­கால் அமைக்­கும் பணி­கள் விரை­வில் முடி­வ­டை­யும்.

"தமி­ழக முதல்­வர் முன்பு சென்னை மேய­ராக இருந்­த­போது­தான் சென்­னை­யில் மழை நீர் வடி­கால் அமைக்­கும் பணி­கள் தொடங்­கின. அப்­போது இந்­தப் பணி­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன.

"தற்­போது பிற மாநி­லத்­தவரும் பார்த்து வியக்கும் வகை­யில் சென்னை­யில் அனைத்து சேவைத் துறை­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து சாலை­கள், தெரு­வி­ளக்­கு­கள், குடி­நீர் வச­தி­கள் எனப் பல்­வேறு திட்­டப் பணி­கள் செயல்­ப­டுத்­தப்­படு­கின்­றன," என்­றார் அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன்.

சென்னை மாந­க­ராட்­சி­யில் 2,071 கிலோ மீட்­டர் நீளத்­திற்கு மழை­நீர் வடி­கால்­கள் உள்­ளன என்­றும் இந்த மழை நீர் வடி­கால் முறை­யாக தூர்­வாரி பரா­ம­ரிப்புப் பணி­களை மேற்­கொண்­டால்­தான் மழைக் காலங்­களில் தண்­ணீர் எந்தத் தடையுமின்றி செல்ல முடி­யும் என்­றும் மாந­கராட்சி அதி­காரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். மழை­நீர் வடிகால்­களை முறை­யாக தூர்­வாராத கார­ணத்­தால்­தான் கடந்த ஆண்­டு­களில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து இந்த ஆண்டு மழை­நீர் வடி­கால் பணி­களை முன்­கூட்­டியே தொடங்கி உள்­ளது சென்னை மாந­க­ராட்சி. இதற்­காக ரூ.738 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் நடை­பெ­றும் மழை­நீர் வடி­கால் பணி­க­ளைக் கண்­கா­ணிக்க பொறி­யா­ளர்­களை நிய­மித்து சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் இரு மாதங்­க­ளுக்கு முன்பே உத்­த­ர­விட்­டார்.

இதன் பய­னாகப் பணி­கள் துரித கதி­யில் நடை­பெற்று வரு­வ­தாக வும் மாநி­லத்­தின் பிற பகு­தி­களி­லும் இது­போன்ற பணி­கள் நடப்­ப­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.