தமிழர்க்கே வேலை: சட்டம் இயற்றக் கோரும் ராமதாஸ்

தமிழர்க்கே வேலை: சட்டம் இயற்றக் கோரும் ராமதாஸ்

1 mins read
81b9047d-6f6c-4af7-afa1-a1160dac52b9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள தமி­ழர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களில் முன்­னு­ரிமை கிடைக்க வேண்­டு­மெ­னில், தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும் தமி­ழர்­க­ளுக்கு மட்­டுமே வேலை என்­பதை வலி­யு­றுத்­தும் சட்­டத்தை இயற்ற வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், தமி­ழக அர­சுப் பணி­களில் வெளி­மா­நி­லத்­த­வர் சேரு­வதை தடுக்க மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்வு வாரி­யம், தமிழ்­நாடு சீரு­டைப் பணி­யா­ளர் தேர்வு வாரி­யம், வனத்­துறை சீரு­டைப் பணி­யா­ளர் தேர்­வுக் குழு­மம் ஆகி­யவை நடத்­தும் போட்­டித் தேர்­வு­களில் தமிழ் மொழித் தகு­தித் தேர்வு கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்­டும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும் 80% பணி­கள் தமி­ழர்­க­ளுக்கு மட்­டுமே வழங்­கப்­பட வேண்­டும். இது­தொ­டர்­பான தேர்­தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்­றும் வகை­யில் தமி­ழ­கத்­தில் தனி­யார் வேலை­கள் தமி­ழர்­க­ளுக்கே என்­பதை உறுதி செய்ய அரசு சட்­டம் இயற்ற வேண்­டும்," என்று டாக்­டர் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.