ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட இயலாது: இபிஎஸ்

ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட இயலாது: இபிஎஸ்

2 mins read
a2cb3ae1-869d-4356-9a3c-372fecd420fc
-

மேல்முறையீட்டு மனுமீது இன்று விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி ஜெயச்­சந்­தி­ரன் அண்­மை­யில் ஒரு தீர்ப்பை வெளி­யிட்­டார்.

"ஜூலை 11ஆம் தேதி நடந்த அதி­முக பொதுக்­குழு செல்­லாது. அதி­மு­க­வில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்­டும்," என்று அதில் அவர் கூறி­யி­ருந்­தார்.

இந்­தத் தீர்ப்பை எதிர்த்து எடப்­பாடி பழ­னி­ச்சாமி தரப்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீட்டு மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அந்த மனு­வில், "தனி நீதி­பதி தனது அதி­கா­ரத்­தின் வரம்பை மீறி இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருக்­கி­றார். இந்த வழக்­கின் கோரிக்­கையே ஜூலை 11ஆம் தேதி பொதுக்­கு­ழுக் கூட்­டத்­திற்­குத் தடை விதிக்க வேண்­டும் என்­ப­து­தான். எனவே, ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்­டும் என்று தனி ­நீ­தி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருப்­பது தவறு.

"பொதுக்­கு­ழுவை ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் இரு­வ­ரும் இணைந்­து­தான் கூட்ட வேண்­டும் என்­றும் எதிர்­கா­லத்­தில் இரு­வ­ரும் சேர்ந்து செயல்­பட வேண்­டும் என்­றும் தனி நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளார். அது இய­லாத காரி­யம். நாங்­கள் இரு­வ­ரும் மீண்­டும் இணைந்து செயல்­

ப­டு­வ­தற்­கான சூழல் இல்லை. எனவே தனி­நீ­தி­ப­தி­யின் உத்­த­ரவை ரத்து செய்ய வேண்­டும். அந்த உத்­த­ர­வுக்குத் தடை விதிக்க வேண்­டும்," என்று கூறப்­பட்டு இருந்­தது.

இந்த மனுவை நேற்று விசா­ரித்த நீதி­ப­தி­கள் எம்.துரை­சாமி, சுந்­தர் மோகன் அடங்­கிய அமர்வு, மேல்முறை­யீட்டு வழக்குகளுக்கான எண்­ இடும் நடை­மு­றை­கள் பிற்­

ப­கல் 1.30 மணிக்கு முன்­பாக முடி­வுற்­றால் மூன்று வழக்­கு­க­ளை­யும் ஆகஸ்ட் 23ல் (இன்று) விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தது.