மண்டபம்: பொருளியல் நெருக்கடியில் சிக்கி இலங்கை தவித்துவரும் நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த சந்திரகுமார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருபாகரன் ஆகிய இருவரது குடும்பத்தினர் நான்கு குழந்தைகளுடன் தமிழகம் வந்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து ஃபைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்த எட்டு இலங்கைத் தமிழர்கள், ஆட்டோவில் ஏறி மண்டபம் கடல்துறை காவல் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
நெருக்கடி தொடங்கியதிலிருந்து இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

