ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள்: ஐவர் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள்: ஐவர் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
b1885657-4be4-4c39-a52c-db86a76f2e52
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள கோயில்­களில் அர்ச்­ச­கர்­கள், பூசா­ரி­கள் மற்­றும் பரம்­பரை அறங்­கா­வ­லர்­கள் பணி நிய­ம­னம் மற்­றும் பணி நிபந்­த­னை­கள் தொடர்­பாக இந்து சமய அற­நி­லை­யத் துறை 2020ஆம் ஆண்டு புதிய விதி­களை அறி­மு­கம் செய்­தது.

18 வயது முதல் 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் மட்­டுமே அர்ச்­ச­க­ராக முடி­யும்; அவர்­கள் ஆகம பள்­ளி­களில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்­டும் என்­பன உள்­ளிட்ட பல்­வேறு நிபந்­த­னை­கள் அந்த விதி­களில் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதனை எதிர்த்து அகில இந்­திய ஆதி­சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் சேவா சங்­கம் உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பைச் சேர்ந்­த­வர்­களும் தனி

­ந­பர்­களும் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­த­னர். ஆகம விதி­க­ளைக் கடைப்­பி­டிக்­கா­மல் அரசு கோயில்­களில் அர்ச்­ச­கர், ஓது­வார்­களை நிய­மிக்க உள்­ள­தாக அவர்­க­ளின் மனு­வில் குற்­றம் சாட்­டப்­பட்டு இருந்­தது.

இந்த வழக்கு தலைமை நீதி­பதி அமர்வு முன் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ரணை முடி­வில் தீர்ப்­ப­ளித்த நீதி­ப­தி­கள், "தமி­ழ­கக் கோயில்­களில் அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம் தொடர்­பாக அர­சின் விதி­கள் செல்­லும்.

"கோயில்­க­ளைப் பொறுத்­த­வரை, ஆகம விதி­க­ளைப் பின்­பற்­றும் கோயில்­கள், ஆகம விதி­க­ளைப் பின்­பற்­றாத கோயில்­களைக் கண்­ட­றி­வ­தற்கு ஐவர் கொண்ட குழுவை நிய­மிக்க வேண்­டும்.

"ஆகம விதி­க­ளைப் பின்­பற்­றும் கோயில்­களில் ஆகம விதி­க­ளின்­படி அர்ச்­ச­கர்­களை நிய­மிக்க வேண்­டும்," என்று உத்­த­ர­விட்டு வழக்கை முடித்து வைத்­த­னர்.