சென்னை: சென்னை, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே ரவுடி தேவேந்திரன் சில நாள்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்தக் கொலை தொடர்பில் கைதான சுகன், விக்கி, புளி மூட்டை, சுதாகர், அன்சாரி ஆகிய ஐவரும் பிணையில் வெளியே வந்தனர். இந்நிலையில், அதே காவல் நிலையம் அருகே சுகன், விக்கி இருவரும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பில் ஐவர் கைதாயினர். இச்சம்பவத்தை பழிக்குப் பழி சம்பவம் என்ற கோணத்தில் காவல் துறை விசாரிக்கிறது.

