செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f0675284-1eda-487e-96bb-c0a11f21d8fd
-

வானிலை ஆய்வு: தமிழகத்தில்

5 நாட்­க­ளுக்கு கன­மழை பெய்­யும்

சென்னை: தமி­ழ­கத்­தில் வளி­மண்­டல மேல­டுக்கு சுழற்சி கார­ண­மாக 5 நாட்­க­ளுக்கு கன­மழை பெய்­யும் என வானிலை ஆய்வு மையம் தக­வல் தெரி­வித்­துள்­ளது.

ஐந்து நாட்­க­ளுக்கு பல இடங்­களில் கன மழை பெய்­யக்­கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது. நீல­கிரி, கோயம்­புத்­தூர், தேனி, திண்­டுக்­கல், திருப்­பூர், புதுக்­கோட்டை, கட­லூர், விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு, வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, ஈரோடு, திருச்­சி­ராப்­பள்ளி, அரி­ய­லூர், பெரம்­ப­லூர், கள்­ளக்­கு­றிச்சி, டெல்டா மாவட்­டங்­க­ளின் பல இடங்­களில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது. மேலும் கும­ரிக்­க­டல், மன்­னார் வளை­குடா, தென்­த­மி­ழக கரை­யோ­ரம், தென்­மேற்கு வங்­கக்­க­ட­லில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்­தில் பலத்த காற்று வீசும் என்­ப­தால் மீன­வர்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு வானிலை ஆய்வு மையம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

மூடும் அபா­யத்­தில் கொலோன் பல்கலைக் கழ­கத்­தின் தமிழ்ப் பிரிவு

சென்னை: கடந்த 1963 முதல் ஜெர்­ம­னி­யின் கொலோன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இந்­தி­ய­வி­யல் துறை­யில் தமிழ் பிரி­வும் செயல்­பட்டு வரு­கிறது. இதை, தமி­ழால் ஈர்க்­கப்­பட்டு, தமிழ்­பயின்று, அறி­ஞ­ரான க்ள­வுஸ் லுட்­விட் ஜென­ரட் எனும் ஜெர்­ம­னி­யர் நிறு­வி­னார். இதில், ஆய்­வுக்­கான வகை­யில், 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பழம்­பெ­ரும் தமிழ் நூல்­களும், ஓலைச்­சு­வ­டி­களும் உள்­ளன. இந்­நி­லை­யில் கொலோ­னின் தமிழ்ப் பிரிவை காக்க, அதன் உத­விப் பேரா­சி­ரி­ய­ரான ஸ்வென் வொர்ட்­மான் அண்­மை­யில் தமி­ழக அர­சுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார். அதில் கடந்த 2021, ஜூலை 7ல் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அளித்த தமி­ழக அர­சின் நிதி­யை­யும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். இதன் கார­ண­மாக 2023 மார்ச் 31 வரை தமிழ்ப் பிரிவை காத்து தொடர உத­வி­ய­தாக முதல்­வ­ருக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்ப் பிரி­வின் நிலைத்­தன்­மை­தொ­டர நிதி­யு­தவி தேவைப்­ப­டு­வ­தாக தனது கடி­தத்­தில் குறிப்­பிட்ட பேரா­சி­ரி­யர் ஸ்வென், மேலும் ஓர் ஆண்­டுக்கு நிதி அளித்து தமி­ழக அரசு உத­வும்­படி கோரிக்கை விடுத்­துள்­ளார்.

கல்­லூரி துறைத் தலை­வர் மீது நடவடிக்கை

திருச்சி: திருச்சி பெரி­யார் அர­சு ­கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் எம்.ஏ. படித்த மாணவி ஒரு­வர், ஒரு துறைத் தலை­வர் தன்னை பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தா­க­வும், உடல் மற்­றும் மன ரீதி­யாக பல்­வேறு துன்­பு­றுத்­தல்­கள் செய்­த­தா­க­வும் முதல்­வ­ரி­டம் புகார் அளித்­தார். முதல்­வர் விசா­ரிக்­கும்­படி கல்­லூரி நிர்­வா­கத்­திற்கு அறிக்கை அனுப்பி 20 நாட்­க­ளுக்கு மேல் ஆகி­யும், அவர் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டா­மல் உள்­ளது. இந்­நி­லை­யில், கல்­லூ­ரி­யின் ஆங்­கி­லத் துறை­யில் பேரா­சி­ரி­யர்­கள் அனை­வ­ரும் ஒன்று திரண்டு கல்­லூரி முதல்­வ­ரைச் சந்­தித்து, துறைத் தலை­வ­ரின் செயல்­பா­டு­கள் தங்­க­ளுக்கு மன உளைச்­ச­லைத் தரு­வ­தா­க­வும், அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி மனு கொடுத்­துள்­ள­னர்.

ஆடை உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­டம் பண­மோசடி

திருப்­பூர்: பின்­ன­லாடை உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து நூதன முறை­யில் பணம் பறிக்க ஒரு கும்­பல் வலை விரித்து வரு­கிறது. குறு, சிறு பின்­ன­லாடை உற்­பத்­தி­யா­ளர்­கள் தான் இந்த ஆசா­மி­க­ளின் இலக்கு.

கைத்­தொ­லை­பேசி எண், முக­வரி விவ­ரங்­களை இணை­யம் வழி பெற்­று­வி­டு­கின்­ற­னர். வாட்ஸ்­அப் செய­லி­யில் வர்த்­த­கர் போலவே உரை­யாடி பணம் பறிக்க முயற்சி செய்­கின்­ற­னர்.

இது­போன்ற மோச­டிக்­கா­ரர்­க­ளின் வலை­யில் சிக்கி சிலர் பணத்தை இழந்­துள்­ள­னர். ஆர்­டர் வழங்­கு­வ­தாக ஆசை­காட்டி மோசடி செய்­வோ­ரின் வலை­யில் பின்­ன­லாடை உற்­பத்­தி­யா­ளர்­கள் சிக்­கிக்­கொள்­ளக்­கூ­டாது என பின்­ன­லாடை உற்­பத்­தி­யா­ளர்­களில் ஒரு­வ­ரான முத்­து­கி­ருஷ்­ணன் கூறி­யுள்­ளார்.