சென்னை: இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் செப்புப்பட்டயமும் பரிசாக அளிக்கப்படும். பரிசளிப்பு விழா நவம்பர் 14ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி சிறுவர் அல்லது சிறுவர் படைப்புக்கான விருது 'மல்லிகாவின் வீடு' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான இளைஞர்களுக்கான சாகித்ய அகாடமி விருது, 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக, எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

