குழந்தைகளை சட்டத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கவலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி நிலையத்தில், குழந்தைகள் நல காவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வுப் பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கிவைத்து அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றினார். அப்போது, "கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக, வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குழந்தைகள் இசைக் கருவிகள் வாசிப்பது, யோகா உள்ளிட்டவற்றை கற்று வருகின்றனர்.
குழந்தைகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும்போது குழந்தைநேய எண்ணத்தோடு, அவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் அணுகவேண்டும்.
"இதற்கு நீதித்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அந்தக் குழந்தைகள் நல்ல குடிமக்களாக மாற வாய்ப்புக்கிடைக்கும்," என்றார்.

