புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகு வதாக நேற்று அறிவித்தார்.
கட்சியில் இருந்த ஆலோசனை அமைப்பை ராகுல் காந்தி நாசமாக்கிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் தொடர்பில் ஐந்து பக்க கடிதத்தையும் சோனியாவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
2014ல் நடந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கட்சியில் அனைத்து நிலை களிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்.
இதையடுத்து 'ஜி23' என்று அழைக்கப்பட்ட இவர்கள் ஓரங்கட்டபட்டதாகக் கூறப்பட்டது. மூத்த தலைவர்களாக இருந்தாலும் இவர் களால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு களைப் பெற்று கட்சியை உயரத்துக்குக் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே. இவர்கள், தேர்தலின்போது தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் கட்சிக்கு நிரந்தரத் தலைமையை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக்குழுத் தலை வராக, அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்காமல் தட்டிக் கழித்து காங்கிரஸ் தலைமையை குறைகூறுவதாக இவர் மீது கட்சித் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி யின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கட்சியில் சேர்ந்தது முதல் தனது பணி, செயல்பாடுகள், முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜீவ் ஆகியோருடன் பணியாற்றியது குறித்து விளக்கிஉள்ள குலாம் நபி ஆசாத், ராகுலின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரின் குழந்தைத்தனமான செயல்பாடுகளே 2014ஆம் ஆண்டின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், குஜராத் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியது சோனியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

