விநாயகர் சதுர்த்தி; சிலைகளைக் கரைக்க வழிமுறை

விநாயகர் சதுர்த்தி; சிலைகளைக் கரைக்க வழிமுறை

1 mins read
331fe716-4a70-4780-9dbb-6e5ab5c425b1
-

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் விநா­ய­கர் சதுர்த்தி வரும் 31ஆம் தேதி கோலா­க­ல­மாக கொண்­டா­டப்பட உள்­ளது.

இதற்­கான அனைத்து ஏற்­பாடு களும் முழுவீச்­சில் நடந்து வரு கின்­றன.

இந்த நிலையில் விநா­ய­கர் சிலை­களை நீர்­நிலைகளில் கரைப்­பது குறித்த வழி­முறைகளை மாசுக்­கட்­டுப்­பாட்டு வாரி­யம் வெளி­யிட்­டுள்­ளது. அதில், களி­மண்­ணால் செய்­யப்பட்ட விநா­ய­கர் சிலை­களை மட்­டும் நீர்­நி­லை­களில் கரைக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பு ஏற் படுத்­தாத மூலப்­பொ­ருட்­க­ளால் ஆன விநா­ய­கர் சிலை­களை நீர் நிலை­களில் பாது­காப்­பான முறை யில் கரைக்க அனு­ம­திக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிலை­க­ளின் ஆப­ர­ணங்­கள் தயா­ரிப்­ப­தற்­காக உலர்ந்த மலர்­கள், வைக்­கோல், மரங்­க­ளின் இயற்கை பிசி­னைப் பயன்­ப­டுத்த அறி­வு­றுத்­தப்பட்­டுள்­ளது.

ஒரு­முறை பயன் படுத்­தும், தெர்­மா­கோ­லால் ஆன பொருட்­களை அனு­ம­திக்­கக்கூடாது. சிலை­க­ளுக்கு வர்­ணம் பூச செயற்கை ரசா­யன வர்­ணங்­களை பயன்­ப­டுத்தக் கூடாது என்று மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே சென்­னை­யில் காசி­மேடு, பட்­டி­னப்­பாக்­கம், எலி­யட்ஸ் கடற்­கரை, திரு­வான்­மி­யூர் ஆகிய இடங்­களில் மட்­டுமே சிலை களைக் கரைக்க அனு­மதி அளிக்­கப்பட்­டுள்­ளது.

மேலும் விநா­ய­கர் சதுர்த்­தியை முன்­னிட்டு சென்­னை­ மாந­கரில் பாது­காப்பு பணி­யில் 20,000 காவ­லர்­கள் நிறுத்­தப்­படவிருக்கின்றனர்.