சென்னை: தமிழக மீனவர்கள் ஒன்பது பேரை விடுவிக்க இலங்கை திரிகோணமலை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட ஒன்பது பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது
நாகை, தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இருந்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும் அதிலிருந்த 9 மீனவர் களையும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர். மீனவர்களின் வழக்கு நேற்று திரிகோணமலை யில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

