சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்து இருந்தார். மேலும் 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது 40 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலையாகி உள்ளனர்.
40 கைதிகளுக்கு விடுதலை
1 mins read
-

