பெற்ற தாயை தவிக்க விட்டுவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகன் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெற்ற தாயை தவிக்க விட்டுவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகன் தடுத்து நிறுத்தப்பட்டார்

2 mins read
f6dcd6a3-ab6a-47bd-91e9-9de2af305ffa
-

சென்னை: பெற்ற தாய்க்கு உதவி ஏதும் செய்­யா­மல் நிர்க்­க­தி­யாய் விட்­டுச்செல்ல முயன்ற மகனை சென்னை காவல்­துறை அதி­ர­டி­யாக கைது செய்­தது. அமெ­ரிக்கா செல்ல இருந்த மகன் விமான நிலை­யத்­தில் தடுத்து நிறுத்­தப்­பட்­டார்.

சென்னை, மயி­லாப்­பூர் பகுதி­யைச் சேர்ந்த 74 வய­தான துர்­காம்­பா­ளின் கண­வர் குப்­பு­சாமி தமது 90வது வய­தில் கடந்த மாதம் கால­மா­கி­விட்­டார்.

இத்­தம்­ப­தி­யர்க்கு இரு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்­ளை­கள். இவர்­களில் மூத்த மகன் கால­மா­கி­விட்­டார். அமெ­ரிக்­கா­வில் இருக்­கும் இளை­ய ­ம­கன் ராம­கி­ருஷ்­ண­னால் தந்­தை­யின் இறுதிச்சடங்­குக்கு வரமுடி­ய­வில்லை. இதை­ய­டுத்து, குடும்ப வழக்­கப்­படி நடை­பெறும் சடங்­குக்­காக மட்­டும் பத்து நாள்­க­ளுக்­குப் பிறகு அவர் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து சென்னை வந்­தார்.

சடங்­கு­கள் முடிந்த பின்­னர் மக­னு­டன் இருக்க விரும்­பி­யுள்­ளார் ராம­கி­ருஷ்­ண­னின் தாயார் துர்­காம்­பாள், ஆனால் மக­னுக்கோ தாயை உடன் அழைத்­துச் செல்­வ­தில் விருப்­பம் இல்லை.

இதை அவர் துர்­காம்­பா­ளி­டம் தெரி­வித்­த­போது, அவர் வய­தான காலத்­தில் தம்­மைக் கைவிட்­டு­விட வேண்­டாம் என மக­னி­டம் கெஞ்­சி உள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் வச­தி­யு­டன் இருந்­தா­லும் தன் பெற்­றோ­ருக்கு கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ராம­கி­ருஷ்­ணன் எந்த உத­வி­யும் செய்­ய­வில்லை எனக் கூறப்­படு­கிறது.

தற்­போது கண­வ­ரும் கால­மா­கி­விட்­ட­தால், தானும் அமெ­ரிக்­கா­வுக்கு வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார் துர்­காம்­பாள்.

ஆனால் ராம­கி­ருஷ்­ணன் இதை ஏற்­க­வில்லை. மேலும் பெற்ற தாய்க்கு செல­வுக்­கும்­கூட பணம் தர அவர் முன்­வ­ர­வில்லை எனத் தெரி­கிறது.

மாறாக, தாயை முதி­யோர் இல்­லத்­தில் சேர்த்­து­விட முடிவு செய்­துள்­ளார். இதை அறிந்த அவ­ரது சகோ­தரி தன் வீட்­டுக்கு துர்­காம்­பாளை அழைத்­துச் சென்­றார்.

இதை­ய­டுத்து திடீர் திருப்­ப­மாக மக­ளு­டன் அரு­கில் உள்ள காவல் நிலை­யத்­துக்­குச் சென்ற துர்­காம்­பாள், அங்கு நடந்த அனைத்­தை­யும் கண்­ணீர்­மல்க விவ­ரித்து புகார் அளித்­தார்.

அதன் பேரில் உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொண்ட காவல்­து­றை­யி­னர் மூத்த குடி­மக்­கள் பெற்­றோர் பாது­காப்புச் சட்­டத்­தின்­கீழ் வழக்­குப்­ப­திவு செய்­த­னர். ராம­கி­ருஷ்­ணன் அமெ­ரிக்கா செல்­வ­தைத் தடுக்­க ­வி­மான நிலை­யங்­க­ளுக்கு 'லுக் அவுட்' நோட்­டீஸ் அனுப்­பி­னர்.

கடந்த 22ஆம் தேதி ராம­கி­ருஷ்­ணன் அமெ­ரிக்கா செல்­வ­தற்­காக சென்னை விமான நிலை­யம் சென்­ற­போது, விமான நிலைய அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்­தி­னர். பின்­னர் அவர் காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு, நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

இதை­யெல்­லாம் எதிர்­பார்க்­காத ராம­கி­ருஷ்­ணன் கடும் அதிர்ச்­சிக்கு ஆளா­னார். பின்­னர் தனது தாயா­ருக்கு ரூ.8 லட்­சம் கொடுப்­ப­தாக அவர் உறுதி அளித்­ததை அடுத்து, நீதி­பதி அவ­ரைப் பிணை­யில் விடு­வித்­தார்.