சென்னை: கொரோனாவுக்கான கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொள்வதில் தமிழகம் பின்தங்கி உள்ளது.
இதனால் கொரோனா தடுப்பூசி செயல்பாடுகளில் தமிழகம் ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு ஓர் இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறது என்றும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மெத்தனம் காட்டக்கூடாது என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது என்றும் தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி செயல்பாட்டில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

