மயில்சாமி அண்ணாதுரை: தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டும்

மயில்சாமி அண்ணாதுரை: தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டும்

1 mins read
de3c4a7c-e50d-4885-8920-791a3e81c3dd
மயில்சாமி அண்ணாதுரை. படம்: ஊடகம் -

சென்னை: இளை­ஞர்­கள் கடமை உணர்­வு­டன் இருக்க, பொறுப்­பான வாழ்க்­கையை வாழ வேண்­டும் என விஞ்­ஞானி மயில்­சாமி அண்­ணா­துரை அறி­வு­றுத்தி உள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற தனது புத்­தக வெளி­யீட்டு விழாவில் பேசிய அவர், அனைத்து துறை­க­ளிலும் தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­றார்.

"இன்று இளை­யர்­க­ளுக்கு அதிக கவ­னச்சித­றல் ஏற்­பட வாய்ப்பு இருக்­கிறது. சில விஷ­யங்­கள் இளை­ஞர்­க­ளின் வாழ்க்­கையை உயர்த்­தும் சில விஷ­யங்­கள் அவர்­களை கீழ் நிலைக்கு அழைத்­துச் செல்­லும். அது எவை என்ற புரி­தல் இருக்க வேண்­டும்," என்­றார் மயில்­சாமி அண்­ணா­துரை.

தமி­ழில் எழு­தும்­போது தமி­ழும் உய­ரும், தமி­ழ­னும் உயர்­வான் என்று குறிப்­பிட்ட அவர், இலக்­கி­யம் தாண்டி அனைத்து துறை­க­ளி­லும் தமிழ் ஓங்கி ஒலிக்­க­வேண்­டும் என்­றார்.

" மாண­வர்­கள் தங்­கள் இலக்கு என்ன என்­பதை இயல்­பா­கவே கண்­டு­பி­டிக்க முடி­யும். பின்­னர் அதை நோக்­கி நம்பிக்கையுடன் பய­ணிக்க வேண்­டும்.

"அடுத்த தலை­மு­றைக்கு பல வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்­றன. புத்­த­கம் படித்­தால் மன­தில் பொறி உரு­வா­கும். எனது புத்­த­க­மும் உங்­க­ளது திரியை பற்ற வைக்­கும் என்ற நம்­பிக்கை எனக்கு அதி­கம் உள்­ளது," என்றார் விஞ்ஞானி மயில்­சாமி அண்­ணா­துரை.