லால்குடி கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

லால்குடி கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

1 mins read
5c3e552a-7d1c-4420-bc1d-7e7365b49561
சோழர்கால கல்வெட்டுகள். படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: லால்­குடி அருகே உள்ள கோவி­லில் சோழர்­கால கல்­வெட்­டு­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அங்­குள்ள திரு­மங்­க­லம் சாம­வே­தீ­சு­வ­ரர் கோவி­லில் கலைக்­கல்­லூரி மாண­வர்­கள் மேற்­கொண்ட ஆய்­வின்­போது இரண்டு கல்­வெட்­டு­கள் தென்­பட்­டன.

திரு­மங்­க­லம் சாம­வே­தீ­சு­வ­ரர் கோவில் ராமா­ய­ணக் காட்­சி­களை தொடர் சிற்­பங்­க­ளாகப் பெற்­றுள்ள மிகச் சில தமிழகக் கோவில்­களில் ஒன்று என்று டாக்­டர் ராச­மா­ணிக்­க­னார், வர­லாற்­றாய்வு மைய இயக்­கு­நர் கலைக்­கோ­வன் தெரி­வித்­தார்.

பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்­திய தொல்­லி­யல்­துறை இந்த கோவி­லில் இருந்து 12 சோழர் கல்­வெட்­டு­க­ளை­யும் நாயக்க அர­சர் கல்­வெட்­டு­க­ளை­யும் படி­யெ­டுத்து அவற்­றின் சுருக்­கங்­களைப் புதுப்­பித்­துள்­ளன என்­றும் அவர் கூறி­னார்.

"கடந்த 1993ஆம் ஆண்டு ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு, கூடு­த­லாக ஐந்து கல்­வெட்­டு­க­ளைக் கண்­ட­றிந்து அவற்­றின் செய்­தி­கள் பதிப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய ஆய்வு மேலும் இரண்டு சோழர்­கால கல்­வெட்­டு­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வந்­துள்­ளது," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார் கலைக்­கோ­வன்.

தற்­போது கிடைத்­துள்ள கல்­வெட்­டு­கள் மூலம் பல புதிய தக­வல்­கள் கிடைத்­துள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், திரு­வி­டை­ம­ரு­தூ­ரில் வசித்த தாழைக்­கு­டியைச் சேர்ந்த வணி­கர் ஆண்­ட­பிள்­ளை­யார் என்­ப­வர் இங்­குள்ள சுப்­பி­ர­ம­ணி­யர் திரு­முன்னைப் பழுது பார்த்­துப் புதுப்­பித்துக் கட்­டி­ய­தாக ஒரு கல்­வெட்டு தெரி­விக்­கிறது என்­றார்.

"மன்­னர் பெயரோ, ஆட்­சி­யாண்டோ இல்­லா­த­போ­தும், கல்­வெட்­டின் எழுத்­த­மைதி கொண்டு அதனை பொதுக்­கா­லம் 14ஆம் நூற்­றாண்­டுக்­கு­ரி­ய­தாக கொள்­ள­லாம்.

திரு­மங்­க­லம் சாம­வே­தீ­சு­வ­ரர் கோவி­லில் மேலும் சில நாள்கள் ஆய்வு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.