நான்கு நாள்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை

நான்கு நாள்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை

1 mins read
430a05a1-cd3f-49af-84ad-5e6b8de1e482
மழைநீர் தேங்கியுள்ள ஓசூர் பேருந்து நிலையம். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் அடுத்த நான்கு நாள்­க­ளுக்கு கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே மாநி­லம் முழு­வ­தும் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் பலத்த மழை பெய்து வரு­கிறது. இந்­நி­லை­யில் செப்­டம்­பர் 1ஆம் தேதி வரை மழை நீடிக்­கும் என அம்­மை­யம் முன்­ன­றி­வித்­துள்­ளது.

தமி­ழ­கப் பகு­தி­க­ளின் மேல் வளி­மண்­டலக் கீழ­டுக்கு சுழற்சி நில­வு­வ­தால் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் இடி, மின்­ன­லு­டன் கூடிய மித­மான மழை பெய்­யக்­கூ­டும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் பா.செந்­தா­ம­ரைக்­ கண்ணன் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளார்.

இன்­றும் நாளை­யும் ஈரோடு, நீல­கிரி, கோவை, திருப்­பூர், தேனி, திண்­டுக்­கல், மதுரை, விரு­து­ந­கர், சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், தென்­காசி, திரு­நெல்­வேலி, கன்­னி­யா­கு­மரி, தூத்­துக்­குடி, புதுக்­கோட்டை, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை மாவட்­டங்­களில் கன­ம­ழையை எதிர்­பார்க்­க­லாம் என அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

இதே­போல் செப்­டம்­பர் 1ஆம் தேதி­யும் மேற்­கு­றிப்­பிட்ட பெரும்­பா­லான மாவட்­டங்­களில் கன­ம­ழை­யும் சில இடங்­களில் லேசான மழை­யும் பெய்­யும் எனத் தெரி­கிறது.

சென்­னை­யில் கடந்த இரு தினங்­க­ளாக பல்­வேறு பகு­தி­களில் பகல் வேளை­யி­லும் ஒரு மணி­நே­ரம் மழை பெய்­துள்­ளது.

அடுத்த இரு தினங்­க­ளுக்கு சென்­னை­யில் வானம் மேக­மூட்­டத்­து­டன் காணப்­படும் என்­றும் சில இடங்­களில் மட்­டும் இடி, மின்­ன­லு­டன் மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் வானிலை ஆய்வு மையம் கணித்­துள்­ளது.