டிடிவி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

டிடிவி: ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

2 mins read
1b43b875-8537-4bf8-b5ef-b2a252215010
தினகரன். படம்: ஊடகம் -

தஞ்­சா­வூர்: அதி­மு­க­வில் கருத்து வேறு­பா­டு­க­ளை மறந்து அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி வரு­வதாகவும் அது சரி­யான கருத்து எனத் தாம் கரு­து­வ­தா­க­வும் அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி.தின­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

திமுக என்ற தீய சக்­தியை ஆட்­சிப் பொறுப்­பில் இருந்து அகற்றி, எது சரி­யான வழியோ அதைச் செயல்­ப­டுத்த வேண்­டும் என்று தஞ்­சா­வூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

"நேற்றுவரை நடந்­ததை மறந்து விட்டு, 'எல்­லாம் நல்­ல­தற்கே, நல்­லது நடக்­கும்' என்ற எண்­ணத்­தில் செயல்­பட வேண்­டும். அவ­ர­வர் அவ­ர­வ­ராக இருந்து செயல்­பட வேண்­டும் என்­ப­தைத்­தான் நான் அனை­வ­ருக்­கும் கூறு­கி­றேன்.

"அனை­வ­ரும் இணக்­க­மாக இருந்து செயல்­பட வேண்­டும். அதி­கம் பாதிக்­கப்­பட்ட நாங்­களே பெருந்­தன்­மை­யாக எடுத்­துக்­கொள்­ளும் நிலை­யில், அவர்­கள் பழை­ய­தையே நினைத்­துக்கொண்­டி­ருக்­கக் கூடாது," என்­றார் தின­க­ரன்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை அனை­வ­ரும் இணைந்து எதிர்­கொள்ள வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் அர­சி­யல் பற்றி தெரி­யா­மல் பேசு­வ­தாக விமர்­சித்­தார்.

"ஜெயக்­கு­மார் தெரிந்து பேசு­கி­றாரா அல்­லது எது­வும் தெரி­யா­மல் பேசு­கி­றாரா? எனத் தெரி­ய­வில்லை. எட்டு வழிச்சாலை குறித்து கடந்த ஆட்­சி­யின்­போது திமுக முத­லில் ஆத­ரவு தெரி­வித்து, பின்­னர் எதிர்ப்பு தெரி­வித்­தது. அவர்­களைப் போல் 'பல்டி' அடிப்­ப­வர்­கள் யாரும் கிடை­யாது. எட்டு வழிச் சாலை என்ன பெய­ரில் வந்­தா­லும் மக்­க­ளைப் பாதிக்­கும்­போது அதை நாங்­கள் எதிர்ப்­போம்," என்­றார் தின­க­ரன்.

சசி­கலா, தின­க­ரன் ஆகிய இரு­வ­ரை­யும் அதி­மு­க­வில் சேர்த்­துக்­கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­னர் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ள­னர். மேலும், ஓ.பன்­னீர்­செல்­வத்தை கட்­சி­யில் இருந்து நீக்­க­வும் பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து, மாநி­லம் முழு­வ­தும் புரட்­சிப்­ப­ய­ணம் மேற்­கொண்டு அதி­மு­க­வி­னரை ஒருங்­கி­ணைக்­கப் போவ­தாக பன்­னீர்­செல்­வம் அறி­வித்­துள்­ளார். மற்­றொரு புறம், எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு தமக்கு ஆத­ரவு திரட்ட உள்­ளார். அதி­மு­க­வில் இணைந்து பணி­யாற்ற சசி­க­லா­வை­யும் தின­க­ர­னை­யும் நேரில் சந்­தித்து அழைப்பு விடுக்­கப்­போ­வ­தாக பன்­னீர்­செல்­வம் பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலை­யில், அவ­ரது கருத்­து­டன் ஒத்­துப்­போ­கும் வித­மாக, டிடிவி தின­க­ர­னும் அதி­மு­க­வி­னர் ஒருங்­கி­ணைய அழைப்பு விடுத்­துள்­ளார்.

இதற்­கி­டையே, 40 அதி­முக எம்­எல்­ஏக்­களை தன்­வ­சம் இழுக்க ஓ.பன்­னீர்­செல்­வம் திட்­ட­மிட்­டுச் செயல்­பட்டு வரு­வ­தாக ஊட­கச் செய்தி ஒன்று தெரி­விக்­கிறது.