ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

1 mins read
25ea4fa9-7e2a-488d-afae-854cbfac33f7
கண்டன முழக்கம் எழுப்பும் மீனவர்கள். படம்: ஊடகம் -

ராமே­சு­வ­ரம்: ஆறு மீன­வர்­களை இலங்­கைக் கடற்­படை கைது செய்­த­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து ராமே­சு­வ­ரம் பகுதி மீன­வர்­கள் நேற்று வேலை நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இரு தினங்­க­ளுக்கு முன்­னர் ஆறு மீன­வர்­களும் நடுக்­க­ட­லில் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, இலங்­கைக் கடற்­ப­டை­யி­னர் அவர்­களு­டைய பட­கைச் சுற்றி வளைத்­தனர். பின்­னர் அதிலிருந்த ஆறு மீன­வர்­க­ளை­யும் கைது செய்த கடற்­ப­டை­யி­னர், பின்­னர் பட­கை­யும் பறி­மு­தல் செய்­த­னர். இது மீன­வர்­கள் மத்­தி­யில் கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதை­ய­டுத்து, கைது நட­வ­டிக்­கை­யைக் கண்­டித்­தும் பாரம்­ப­ரிய கடல் பகு­தி­யில் தமி­ழக மீன­வர்­கள் பிரச்­சினை இன்றி மீன் பிடிக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் நேற்று ராமே­சு­வ­ரம் விசைப்­ப­டகு மீன­வர்­கள் வேலை நிறுத்­தப் போராட்­டத்தை மேற்­கொண்­ட­னர்.

கைதான மீன­வர்­களை உட­ன­டி­யாக விடு­விப்­ப­து­டன், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இது­வரை பறி­மு­தல் செய்­யப்­பட்ட பட­கு­களை விடு­விக்க வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தி­னர். போராட்­டம் முடி­வடைந்த பின்­னர் அதில் பங்­கேற்ற மீன­வர்­கள் பலர் அமர்ந்­த­ப­டியே இலங்­கைக் கடற்­ப­டை­யைக் கண்­டித்து முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.