சசிகலா, விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும்

சசிகலா, விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும்

2 mins read
6280301a-0142-4d3e-aaea-964e6dbcd7f1
-

ஜெயலலிதா மரணம்: தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் குறித்து விசா­ரணை நடத்தி வந்த ஆறு­மு­க­சாமி ஆணை­யம் தமி­ழக அர­சுக்கு சில பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது.

குறிப்­பாக, ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­கலா, முன்­னாள் சுகா­தார அமைச்­சர் விஜய பாஸ்­கர் ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என விசா­ரணை அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டு உள்ளது.

இத்­த­க­வல் வெளி­யா­னதை அடுத்து அதி­மு­க­வி­னர் மத்­தி­யில் பர­ப­ரப்­பும் புது விவா­தங்­களும் எழுந்­துள்­ளன.

நீதி­பதி ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணை­யத்­தின் அறிக்கை குறித்து நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற தமி­ழக அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

அதன் பின்­னர் அர­சுத்­த­ரப்­பில் வெளி­யி­டப்­பட்ட செய்­திக்­கு­றிப்­பில், வி.கே.சசி­கலா, சிவ­கு­மார், முன்­னாள் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் டாக்­டர் சி.விஜ­ய­பாஸ்­கர், அப்­போ­தைய தலை­மைச் செய­லா­ளர் ராம­மோ­கன ராவ் உள்­ளிட்­டோர் மீது அரசு விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று நீதி­பதி ஆறு­மு­க­சாமி ஆணை­யம் அளித்த அறிக்­கை­யில் பரிந்­து­ரை­கள் செய்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"இது தொடர்­பாக சட்ட வல்­லு­நர்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளைப் பெற்று உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்ட பின்­னர், அதற்­கான விவர அறிக்­கை­யு­டன், ஆணை­யத்­தின் அறிக்­கை­யைத் தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் வைக்­க­வும் அமைச்­ச­ரவை முடி­வெ­டுத்­துள்­ளது," என்று தமி­ழக அரசு மேலும் தெரி­வித்­துள்­ளது.

மறைந்த முதல்­வர் ஜெய­ல­லிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்­டம்­பர் 22ஆம் தேதி­யன்று மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தற்­கான சூழ்­நி­லை­கள் குறித்­தும் அதைத்­தொ­டர்ந்து அவர் மர­ணம் அடை­யும்­போது அளிக்­கப்­பட்ட சிகிச்­சை­கள் தொடர்­பா­க­வும் நீதி­பதி ஆறு­மு­க­சாமி ஆணை­யம் விசா­ரணை நடத்தி வந்­தது.

இதை­ய­டுத்து பல்­வேறு தரப்­பி­ன­ரை­யும் விசா­ரித்த அந்த ஆணை­யம், சில நாள்­க­ளுக்கு முன்­னர் தமி­ழக முதல்­வ­ரி­டம் விசா­ரணை அறிக்­கையைத் தாக்கல் செய்தது.

இத­னால் ஜெய­ல­லி­தா­வின் தோழி சசி­க­லா­வுக்கு புதிய நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இதனிடையே, அதி­மு­க­வில் ஏற்­கெ­னவே உட்­கட்­சிப்­பூ­சல் வலுத்து வரு­கிறது. அதன் எதி­ரொ­லி­யாக மீண்­டும் சசி­க­லா­வு­டன் இணைந்து செயல்­பட முடிவு செய்­துள்­ளார் முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம்.

இந்­நி­லை­யில் சசி­க­லாவை விசா­ரிக்க வேண்­டும் என நீதி­பதி ஆறு­மு­க­சாமி ஆணை­யம் பரிந்­துரை செய்­தி­ருப்­பது அதி­முக வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.