'எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை'

'எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை'

1 mins read
1439a954-2053-4cb7-849a-785464ccbca5
-

மதுரை: போக்­கு­வ­ரத்து அதி­க­ரிக்­கும்­போது சாலை­களை விரிவு­படுத்தித்­தான் ஆகவேண்­டும் என்று பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு தெரி­வித்­துள்­ளார்.

மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், சேலம் முதல்­ சென்னை வரை­யி­லான எட்டு வழிச்­சாலை திட்­டத்தை திமுக எதிர்க்­க­வும் இல்லை ஆத­ரிக்­க­வும் இல்லை என்­றார்.

"எட்டு வழிச்­சாலை திட்­டத்­திற்கு திமுக எதிரி அல்ல. பிரச்சினை­களை சரிசெய்ய வேண்­டும் என்­று­தான் முன்­னர் கூறி­னோம்.

"எட்டு வழிச்­சாலை திட்­டத்தை பொறுத்­த­வரை தமி­ழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. போக்­கு­வ­ரத்து அதி­க­ரிக்­கும்­போது சாலை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அப்­போது நிலங்­களைக் கைய­கப்­ப­டுத்த வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கிறது," என்­றார் எ.வ.வேலு.

இதற்­கி­டையே, விவ­சா­யி­களுக்கு பாதிப்பு இல்­லா­மல் எட்டு வழிச் சாலை அமைக்க வேண்­டும் என மதி­முக தலை­மைக் கழக செய­லா­ளர் துரை வையாபுரி தமி­ழக அரசை வலி­யு­றுத்தி உள்­ளார்.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் சேலம் எட்டு வழிச் சாலை அமைப்­ப­தற்கு விவ­சா­யி­க­ளி­டம் கருத்து கேட்­கா­மல் அதி­ர­டி­யாக நிலத்தைக் கைய­கப்­ப­டுத்த அரசு நினைத்­தது என்­றும் இதற்­குத்­தான் திமுக, மதிமுக உள்­ளிட்ட கட்­சி­கள் எதிர்ப்பு தெரி­வித்­தன என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"விவ­சா­யி­க­ளி­டம் கருத்து கேட்டு அவர்­க­ளுக்கு பாதிப்பு இல்­லாத வகை­யில் எட்டு வழிச் சாலை அமைக்க திமுக அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. மதி­மு­க­வின் நோக்­க­மும் அது­தான்," என்­றார் துரை வையா­புரி.

கடந்த அதி­முக ஆட்­சி­யில் சேலம் எட்டு வழிச்­சா­லைத் திட்­டத்­துக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யதை அடுத்து பல்­வேறு போராட்­டங்­கள் நடை­பெற்­றன.