கனமழையால் சென்னையின் புறநகர் ஏரிகள் நிரம்பின

கனமழையால் சென்னையின் புறநகர் ஏரிகள் நிரம்பின

3 mins read
0a4ed98a-1996-4b47-8f78-e56d439f346d
-

16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை: வெள்ளக்காடானது ஒகேனக்கல்

சென்னை: தமி­ழ­கத்­தின் மற்ற மாவட்­டங்­க­ளைப் போல் சென்னை­யில் தொடர்ந்து மழை பெய்­ய­வில்லை என்­றா­லும், சென்­னை­யின் புற­நகர்ப்­ப­கு­தி­களில் உள்ள ஏரி­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

சென்னை மாந­கர மக்­க­ளின் முக்­கிய குடி­நீர் ஆதா­ரங்­களாக பூண்டி, புழல், சோழ­வ­ரம், செம்­ப­ரம்­பாக்­கம், கண்­ணன்­கோட்டை-தேர்­வாய் கண்­டிகை ஆகிய ஏரி­கள் உள்­ளன.

பருவ மழைக்­கா­லத்­தில் போது­மான மழை பெய்­ய­வில்லை என்­றால் இந்த ஏரி­கள் நிரம்­பா­மல் சென்னை மக்­கள் குடி­நீ­ருக்கு அல்லாட வேண்­டி­யி­ருக்­கும்.

நடப்­பாண்­டில் பரு­வ­மழை நன்­றா­கப் பெய்­துள்­ள­தால் புழல், செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­கள் 90 விழுக்­காடு நிரம்பி உள்­ளன.

பூண்டி ஏரி­யில் சீர­மைப்புப் பணி­கள் நடை­பெற்று வரு­வ­தை­ அடுத்து, அந்த ஏரி­யில் இருந்து தண்­ணீர் முழு­வ­தும் புழல், செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கிறது. இத­னால் இரு ஏரி­களும் கிட்­டத்தட்ட நிரம்­பி­விட்­டன.

மேலும், கடந்த சில தினங்­க­ளாக சென்­னை­யில் இரவு நேரங்­களில் கன­மழை நீடித்து வரு­வ­தால் சென்­னை­யைச் சுற்றி­உள்ள ஏரி­க­ளுக்கு கூடு­தல் நீர் வந்து கொண்­டி­ருக்­கிறது.

இதே­போல் 3.645 டிஎம்சி கொள்­ளளவு கொண்ட செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யில் தற்­போது 3.292 டிஎம்சி தண்­ணீர் உள்­ளது.

சோழ­வ­ரம் ஏரி­யில் வெறும் 132 மில்­லி­யன் கன அடி தண்­ணீர் உள்­ளது. கண்­ணன்­கோட்டை - தேர்­வாய் கண்­டிகை ஏரி­யின் முழு கொள்­ள­ளவு ஐநூறு மில்­லியன் கன­அ­டி­யா­கும். இந்த ஏரி­யும் முழுமை­யாக நிரம்பி உள்­ளது.

புழல் ஏரி­யின் மொத்த கொள்­ளளவு 3.300 டிஎம்சி ஆகும். இதில் 2.994 டிஎம்சி தண்­ணீர் இருப்பு உள்­ளது. ஏரிக்கு விநா­டிக்கு 250 கன­அடி வீதம் தண்­ணீர் வரு­கிறது. இதை­ய­டுத்து சென்னை குடி­நீர் தேவைக்­காக 201 கன­ அடி வீதம் தண்­ணீர் வெளி­யேற்­றப்­ப­டு­கிறது.

16 மாவட்­டங்­க­ளுக்கு கனமழை எச்­சரிக்கை

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில், மூன்று மாவட்­டங்­களில் அதி தீவிர கன­ம­ழை­யும் 13 மாவட்­டங்­களில் பலத்த மழை­யும் பெய்­யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

தமி­ழக உள் பகு­தி­க­ளின் மேல் நில­வும் வளி­மண்­டல கீழடுக்கு சுழற்சி­யால் நீல­கிரி, கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி மாவட்­டங்­களில் ஓரிரு இடங்­களில் இன்று கன­மழை பெய்­யக்­கூ­டும் என முன்­ன­றி­விக்கப்­பட்­டுள்­ளது.

மேலும் கோவை, திருப்­பூர், ஈரோடு, கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, திருப்­பத்­துார், சேலம், நாமக்­கல், கள்­ளக்குறிச்சி, திண்­டுக்­கல், தேனி, தென்­காசி, மதுரை மாவட்­டங்­களில் இன்று கனமழை பெய்­யும்.

நேற்று முன்­தி­னம் காலை நில­வரப்­படி, 24 மணி நேரத்­தில் ஓசூ­ரில் ஆக அதி­க­மாக 10 சென்டி மீட்­டர் மழை பதி­வா­கி­யுள்­ளது. திருப்­பத்­துார், தாள­வாடி 9 சென்­டி­மீட்­டர், கிருஷ்­ண­கி­ரி­யில் 7 செமீ மழை­யும் பெய்­துள்­ளது.

கட­லோ­ரப் பகு­தி­களில் 65 கிலோ மீட்­டர் வேகத்­தில் சூறா­வ­ளிக் காற்று வீசும் என்­ப­தால் மீன­வர்­கள் மீன்­பி­டிக்க கட­லுக்­குச் செல்ல வேண்­டாம் என்று அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

வெள்­ளக்­கா­டான ஒகே­னக்கல்

இந்­நி­லை­யில், ஒகே­னக்­கல் காவி­ரி­யாற்­றில் நீர்­வ­ரத்து 1.70 லட்­சம் கன அடி­யாக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் இத­னால் ஒகே­னக்­கல் வெள்­ளக்­கா­டாக காட்­சி­ய­ளிப்பதா­க­வும் ஊட­கத் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.

தென்­மேற்­குப் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளதை அடுத்து காவிரி நீர்­பி­டிப்புப் பகு­தி­களில் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் கர்­நா­ட­கா­வில் உள்ள கபினி, கேஆர்­எஸ் உள்­ளிட்ட அணை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

மேலும், ஒகே­னக்­கல்­லில் நீர்­வரத்து அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், ஒகே­னக்­கல் காவி­ரி­யாறு வெள்­ளக்­கா­டாக மாறி, அங்­குள்ள அரு­வி­களை மூழ்­க­டித்­த­படி தண்­ணீர் செல்­கிறது.

இதன் எதி­ரொ­லி­யாக கரை­யோரப் பகு­தி­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒகே­னக்­கல் பகு­தி­யில் குளிக்க, பரி­சல் இயக்க, மாவட்ட நிர்­வா­கம் தடையை நீட்டித்­துள்­ளது.

120 அடி கொள்­ளளவு கொண்ட மேட்­டூர் அணை நிரம்­பி­யுள்­ளது. நீர்வரத்து தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், அணை­யில் இருந்து விநா­டிக்கு ஒரு லட்­சத்து 30 ஆயி­ரம் கன­அடி நீர் வெளி­யேற்­றப்­பட்­டது.

மேலும், கர்­நா­டகா அணை­களில் இருந்து 2.12 லட்­சம் கன அடி நீர் திறக்­கப்­பட்­டுள்­ள­தால் அது­வும் மேட்­டூர் அணைக்கு வந்து சேரும். இதை­ய­டுத்து கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, சேலம், ஈரோடு, நாமக்­கல், கரூர், திருச்சி, தஞ்­சா­வூர், நாகப்­பட்­டி­னம் மாவட்­டங்­களில் உள்ள கரை­யோ­ரப் பகு­தி­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்கெனவே பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அணை நிரம்பியதை அடுத்து, அதில் இருந்து 2,520 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.