கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை மாதம் மூண்ட கலவரத்தில் ஈடுபட்டவர்களைச் சிறப்புப் புலனாய்வுத் துறை காவலர்கள் கைது செய்து வருகின்றனர்.
பள்ளியில் உள்ள பொருள்களைச் சூறையாடியது, சேதப்படுத்தியது, காவலர்களையும் காவலர்களின் வாகனம் மீதும் கல்வீசியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், பார்த்திபன், ஹரிஹரன் ஆகிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மூவரையும் 15 நாள்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி உத்தரவிட்டார்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனி யாமூர் சக்தி மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 17ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை சிசிடிவி காட்சிகள், கலவரத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் கைது செய்து வருகின்றனர்.