சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கம் நேற்று மாலை முதல் திடீரென முடக்கப்பட்டது.
சந்தேகப் பேர்வழிகள் சிலர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியதால் இதுகுறித்து இணையக் குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை யில் தகவல் கூறப்பட்டது.
காவல் துறையினர் அமைச்சரின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டுவிட்டர் பக்கத்தை மீட்கவும் முயற்சி மேற்கொண்டனர்.

