ஓணம்: ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை

ஓணம்: ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை

1 mins read
f0203eae-b21f-4615-970b-0f1f4a42178a
சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைகளின்போது போடப்படும் ரங்கோலியை மலர்களால் அலங்காரம் செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: கேரள மக்­க­ளால் வெகு சிறப்­பா­கக் கொண்­டா­டப் படும் ஓணம் பண்­டிகை வரும் 8ஆம் தேதி வரு­கிறது.

இதையொட்டி, தமி­ழ­கத்­தில் வசிக்­கும் கேரள மாநி­லத்­த­வர்­களும் இப்பண்­டி­கை­யைக் கொண்­டா­டும் வகை­யில், ஒன்பது மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அளித்துள் ­ளது.

ஏற்­கெ­னவே சென்னை, திருப்­பூர், கோவை, கன்­னி­யா­கு­மரி, நீல­கிரி மாவட்­டங்­க­ளுக்கு உள்­ளூர் விடு­முறை அளிக்­கப்­பட்டிருந்த நிலை­யில், இப்­போது மேலும் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடு­முறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு, சென்னை ஆகிய மாவட்­டங்­களில் உள்ள அரசு அலு­வ­ல­கங்­களுக்கு விடு­முறை அளிக்­கப்பட்­டுள்­ளது.

இத­னி­டையே பள்ளி, கல்­லூரி களுக்­கும் விடு­முறை அளிக்­கப் பட்டு உள்­ள­தால், மாண­வர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

கேரள ரயில்­கள் 'ஹவுஸ்­புல்'

ஓணம் பண்­டிகை கொண்­டாடு வதற்­காக தமி­ழ­கம், வட மாநி­லங்­களில் வசிக்­கும் கேரள மாநி­ல மக்கள், ரயில்­களில் சொந்த மாநி­லம் செல்­லத் தொடங்கியுள்­ள­னர். அத­னால், ரயில்­கள் நிரம்பிச் செல்கின்றன.