தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகாரிகளை ஈர்க்கும் ரூ.2 இட்லி, ரூ.3 தோசை

1 mins read
1d1de575-0e29-48ac-86c8-560a1c1765d0
ரூ.3க்கு தோசை வார்த்து விற்கும் பெண்மணி. படம்: ஊடகம் -

கட­லாடி: ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் கட­லாடி அருகே ஏ.புன­வா­சல் கிரா­மத்­தில் 2 ரூபாய்க்கு இட்­லி­யும் 3 ரூபாய்க்கு தோசை­யும் விற்­பனை செய்­யப்­ப­டு­வது தமிழக மக்களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

இந்த இட்­லி, தோசைக் கடை­களில் அதி­கா­ரி­கள் முதல் அர­சி­யல்­வா­தி­கள் வரை அனை­வ­ரும் குறைந்த விலை­யில் இட்லி, தோசை­யைச் சாப்­பிட்­டுச் செல்­கின்­ற­னர்.

"இங்கு ஐந்துக்கும் மேற்­பட்ட தோசைக் கடை­கள் உள்­ளன. குறைந்த விலைக்கு இட்லி, தோசை வார்த்து விற்­பதில் இங்கு போட்டி நில­வு­கிறது. ரூ.2, ரூ.3 இட்லி, தோசை சட்னி சாம்­பா­ரு­டன் விற்­பனை செய்­யப்­படு­கிறது. 10 ரூபா­யில் வயிறு நிறை­கிறது. ஒரு சிறிய குடும்­பம் ரூ.25ல் காலை உணவை நிறைவு செய்­ய­லாம்," என்கின்றனர் ஏ.புன­வா­சல் கிரா­ம மக்கள்.

மதுரை, சென்னை, திருச்சி கோவை உள்­ளிட்ட நக­ரங்­களில் ஒரு இட்லி ரூ.10க்கும் ஒரு தோசை ரூ.40க்கும் விற்­கப்பட்டும் நிலை­யில், ஏ.புன­வா­சல், கோவி­லாங்­கு­ளம் இட்லி, தோசைகள் தரம், சுவையுடன் விலை குறைத்து விற்கப்படுவது பலரையும் ஆச்­ச­ரி­யப்பட வைத்துள்ளது.