மன உளைச்சல்: 1.46 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை

மன உளைச்சல்: 1.46 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை

2 mins read
d0b7ac9c-33af-408d-8051-350870c5053e
-

சென்னை: மருத்­து­வப் படிப்பை பயில்­வ­தற்கு நீட் நுழை­வுத் தேர்­வில் வெற்­றி­பெ­று­வது அவ­சி­யம். இந்­தத் தேர்­வுக்­கான முடி­வு­கள் 7ஆம் தேதி இரவு வெளி­யா­னது.

இத்­தேர்­வின் வெற்றி, தோல்வி கள் மாண­வர்­க­ளைப் பாதிக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக, ேதர்­வெழு திய 1 லட்­சத்து 46,000 தமி­ழக மாண­வர்­க­ளுக்கு மன­நல ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­ய­போது, "ஜூலை 17ஆம் தேதி 145,988 தமி­ழக மாண­வர்­கள் நீட் தேர்வை எழு­தி­னர்.

"அவர்­களில் 51.3% மாண­வர்­கள் (67,787 பேர்) தேர்ச்சி பெற்­றுள்­ள­னர். இது கடந்த ஆண்­டு­டன் ஒப்­பிட்­டால் குறை­வு­தான். கடந்த ஆண்டு 54.40% பேர் தேர்ச்சி அடைந்­தி­ருந்­த­னர்.

"தேர்வு எழு­திய அனைத்து மாண­வர்­க­ளின் தன்­னம்­பிக் கையை வளர்க்­க­வும் அவர்­க­ளது மன உளைச்­ச­லைப் போக்­க­வும் 110 மன­நல ஆலோ­ச­கர்­கள் ஆலோ சனை­கள் கூறி வரு­கின்­ற­னர்.

"மொத்த மாண­வர்­களில் 564 பேர் அதிக மன அழுத்­தத்­து­டன் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்டு, அவர்­கள் தொடர்ந்து கண்­கா­ணிக்கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

"மாவட்ட கல்வி அலு­வ­லர், மன­நல ஆலோ­ச­கர்­கள் அடங்­கிய குழு­வி­னர் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் ஆலோசனைகள் கூறி வரு கின்றனர்," என்று சொன்னார்.

இத­னி­டையே, சென்­னையை அடுத்த திரு­முல்­லை­வா­யி­லில் நீட் தேர்­வில் தோல்­வி­ய­டைந்த ஸ்வேதா என்ற மாணவி, மன முடைந்த நிலை­யில், நேற்று தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

இந்­நி­லை­யில், நீட் தேர்­வில் தேர்ச்சி பெறாத மாண­வர்­க­ளுக்கு, அடுத்து அவர்­கள் என்ன செய்­ய­லாம், என்ன படிக்­க­லாம் என்­பது குறித்­தும் ஆலோ­சனைகள் வழங்­கப்­பட உள்­ள­தாக தக­வல்­கள் குறிப்பிட்­டுள்­ளன.

தேர்­வில் தேர்ச்சி பெறாத குழந்­தை­கள் மீது பெற்­றோர் கோபத்­தைக் காட்­ட­வேண்­டாம் என்று கேட்­டுக்­கொண்­டுள்ள அமைச்­சர், ஒரு சில பெற்­றோர் தரும் நெருக்­க­டி­யால்­தான் மாண­வர்­கள் வேறு வழி­யின்றி நீட் தேர்வை எழுதி மன உளைச்சல் அடை­கின்­ற­னர் என்­றும் அமைச்­சர் கூறி­யுள்­ளார்.