கட்டு போட்டு, யாசகம் கேட்டு ஏமாற்றிய 20 பேர் கைது

1 mins read
7870d7b4-8822-45c5-a2c7-b37f09ca5c67
-

சென்னை: சென்­னை­யில் போரூர், வட­ப­ழனி, அடை­யாறு ஆகிய பகு­தி­களில் உள்ள போக்­கு­வ­ரத்து சமிக்­ஞை­களில் கை, கால்­களில் போலி­யாக கட்டு கட்­டிக்­கொண்டு, தங்­க­ளது இய­லா­மை­யைக் கூறி யாச­கம் கேட்போர் வேடத்­தில் இருந்த 20 திரு­டர்­க­ளைச் சென்னை காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

இந்த பிச்­சைக்­கா­ரர்­கள் காலை நேரத்­தில் மட்­டுமே கட்டு கட்டிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் இரவு நேரங் களில் கட்டை பிரித்­து­விட்டு நடந்து செல்­வ­தா­க­வும் சிலர் கூறி­னர்.

திருட்டு வேலை­களில் சிலர் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் பொது மக்­கள் புகார் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து, அவர்­க­ளைப் பிடிக்க குழு அமைக்­கப்­பட்டு தீவிர தேடு­தல் வேட்டை நடத்­தப்­பட்­டது.

போரூர் சமிக்­ஞை­யில் யாச­கர் வேடத்­தில் கால்­களில் கட்­டு­க­ளு­டன் தாங்கி தாங்கி வந்த ஒரு­வரைப் பிடித்து விசா­ரித்­த­போது, அவருக்கு காயம் ஏது­மில்லை என்­பது தெரி­ய­வந்­தது.

அவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில், அவரது உற­வி­னர்­கள் 20 பேர் பிச்சை எடுக்­கும் தொழி­லில் போலி­யாக ஈடு­பட்­டுள்ள­தா­கத் தெரி­வித்­தார். அவர்­கள் மகா­ராஷ்­டிரா, ஆந்­தி­ரப் பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என­வும் கூறி­னார். காலையில் பிச்சை எடுக்­கும் தொழி­லி­லும் இர­வில் திருட்­டுத் தொழி­லி­லும் அவர்கள் ஈடு­பட்டு வந்­ததும் தெரி­ய­வந்­தது.

இத­னி­டையே, சாலை­களில் குழந்­தை­க­ளைப் பிச்சை எடுக்க வைக்­கும் கும்­பல்­களை முழுமையாக களை எடுக்கவேண்­டும் என்று இயக்குநரும் நடி­க­ரு­மான பார்த்­தி­பன் தமி­ழக காவல்துறைக்கு கோரிக்கை விடுத்­துள்­ளார்.