தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ள பாதிப்பு: 24 மணி நேரமும் சிகிச்சை வழங்க உத்தரவு

1 mins read
82ca6080-e289-43f6-ad79-798b2eb57853
-

மயிலாடுதுறை: கொள்­ளி­டம் ஆற்­றில் ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெருக்கு கார­ண­மாக, மயி­லா­டு­துறை மாவட்­டத்­தைச் சேர்ந்த கிரா­ம­மக்­கள் ஒரு வார­மா­கி­யும் வீடு­க­ளுக்­குச் செல்­ல­மு­டி­யா­மல் முகாம்­களில் தவித்து வரு­கின்­ற­னர்.

மயி­லா­டு­துறை மாவட்­டம், சீர்­காழி அருகே உள்ள நாதன்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்­ளம் சூழ்ந்­ததை அடுத்து, முகாம்­களில் தங்கவைக்­கப்­பட்­டுள்ள அப்­ப­குதி மக்­க­ளுக்கு மருத்­துவ முகாம்­கள் மூலம் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

அங்கு ஆய்வு நடத்­திய சுகா­தா­ரத்­துறை இயக்­கு­நர் செல்­வ­விநா­யகம், தொற்றுநோய்­கள் ஏற்­படும் சூழல் உள்ளதால் கரை­யோ­ரம் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் 24 மணி நேர­மும் செயல்­பட உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

தமி­ழ­கத்­தின் பல பகு­தி­களிலும் பெய்­து­வ­ரும் கன­மழை கார­ண­மாக, காவிரி, வைகை, பவானி, தாமி­ர­ப­ரணி போன்ற முக்­கிய ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு, அவற்­றின் கரை­யோ­ரப் பகு­தி­களில் உள்ள மக்­கள் தற்­கா­லிக முகாம்­களில் தங்கவைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேட்­டூர் அணைக்கு நீர்­வ­ரத்து அதி­க­ரித்து உள்ளதால் கொள்­ளி­டம் ஆற்­றில் மீண்­டும் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இது மேலும் அதி­க­ரிக்க வாய்­ப்­புள்­ள­தாக பொதுப்­ப­ணித்­து­றை­யி­னர் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

அந்­தி­யூர் அருகே பவா­னி­யில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட 457 குடும்­பங்­க­ளுக்கு தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, ரூ.1,000 ரொக்­கம் வழங்­கப்­பட்­டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.