மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

2 mins read
ecbb830e-e4df-4cf9-baab-cb36297a831f
-

சென்னை: தமி­ழ­கத்­தில் புதிய மின் கட்­டண உயர்வு அம­லுக்கு வந்­துள் ளதாக மின்­சார ஒழுங்­கு­முறை ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இதன்­மூ­லம், எட்டு ஆண்டு களுக்­குப் பிறகு மாநி­லத்­தில் மின் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

தமி­ழக மின்­வா­ரி­யம் ஏறத்­தாழ ரூ.1.75 லட்­சம் கோடி கட­னில் இருப்­ப­தால், இந்­தக் கட்­டண உயர்வு தவிர்க்­க­மு­டி­யா­தது என்று மின்­வா­ரி­யம் தெரி­வித்­துள்­ளது.

இதற்கு பொது­மக்­களும் அர­சி­யல் பிர­மு­கர்­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

இக்­கட்­டண உயர்வு கூடு­தல் சுமையை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக பொது­மக்­கள் வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், இந்த உயர்வை உட­ன­டி­யாக மீட்­டுக்­கொள்ள வேண்­டு­மென பாமக தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"மக்­க­ளால் தாங்­க­மு­டி­யாத அள­வுக்கு மின் கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­டி­ருப்­பது அதிர்ச்சி அளிக்­கிறது.

"மக்­கள் கடும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் நிலை­யில், கட்­டண உயர்வு தேவை யற்­றது. மக்­க­ளின் மன நிலையை அரசு உண­ர­வேண்­டும்," என்­றும் அன்­பு­மணி கூறி­யுள்­ளார்.

நாம் தமி­ழர் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான் கூறு கையில், "அதி­முக ஆட்­சி­யில் மின்­கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்­ட­போது, கறுப்­புக்­கொடி ஏந்தி, கறுப்பு சட்டை அணிந்து போராட்­டம் நடத்­திய ஸ்டா­லின், இப்­போது முதல்­வ­ரான பின் மின்­கட்­ட­ணத்தை உயர்த்­தி­விட்டு வேடிக்கை பார்ப்­பது சரியா? பொரு­ளா­தார நெருக்­க­டி­யில் தவிக்­கும் மக்­க­ளின் தலை­யில் கட்­ட­ணச் சுமையை ஏற்­று­வ­து­தான் விடி­யல் ஆட்­சியா?" என சாடி­யுள்­ளார்.

மின் கட்­டண உயர்­வுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள அதி­முக பிர­மு­கர் ஓ.பன்­னீர்­செல்­வம், "மின் கட்­ட­ணத்தை உயர்த்­தி­யி­ருப்­பது நியா­ய­மற்ற, மக்­கள் விரோ­தச் செய லாக உள்­ளது. 'சொல்­வது ஒன்று, செய்­வது ஒன்று' என்ற ரீதி­யில் திமுக அரசு செயல்­பட்­டுக்­கொண்டு உள்­ளது," என விமர்­சித்­துள்­ளார்.

தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநி­லச் செய­லா­ளர் பால­கி­ருஷ்­ணன், அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன் ஆகியோரும் மின் கட்­டண உயர்வை உடனே ரத்து செய்­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி உள்­ள­னர்.