மதுரை: பள்ளி மாணவர்களின் மது அருந்தும் பிரச்சினைக்கும் போதைப் புழக்கம் பக்கம் சாயும் பிரச்சினைக்கும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
இல்லையெனில் மது விற்பனைக்குத் தடைவிதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
'டாஸ்மாக்' கடையின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், "சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் பிரச்சினைக் குத் தீர்வு காணப்படவில்லை எனில் மது விற்பனைக்குத் தடைவிதிக்க நேரிடும்," என எச்சரித்து, வழக்கை இரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

