திருவொற்றியூர்: சென்னை, திரு வொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சுபிக்ஷா என்ற சிறுமி, 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை லயம் மாறாமல் பாடி உலகச் சாதனை படைத்துள்ளார்.
அவரை ஆசிரியர்கள், மாண வர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹேமந்த்-மோகனப்பிரியா தம்பதியர். இவர்களின் மூத்த மகள் சுபிக்ஷா, 13.
எட்டாம் வகுப்பில் படித்து வரும் சுபிக்ஷாவுக்கு, சிறு பிராயம் முதலே அனைத்து நாடுகளின் மொழிகளையும் கற்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் இருந்து வந்தது.
இதையடுத்து, பெற்றோரின் ஒத்துழைப்புடன் 'யூடியூப்' மூலம் உலக நாடுகளின் தேசிய கீதங் களைக் கேட்டு, அந்தந்த நாட்டு ராகம், மொழிகளிலும் உச்சரிப்பு பிசகாமல் பாடி அசத்தி உள்ளார்.
அல்பேனியா, ஆப்கானிஸ்தான் என அகர வரிசைப்படி உலக நாடு களைத் தேர்வு செய்து தேசிய கீதங்களை மனப்பாடம் செய்துள்ள சுபிக்ஷா, இதனை உலகச் சாதனை யாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
திருவொற்றியூர் அரசு நூலகத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த நிகழ்வில், 4 மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கீதங்களை இடைவிடாது பாடி அசத்தி உலகச் சாதனை புரிந்தார்.

