'விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி'

'விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி'

1 mins read
d81513b2-4969-4d0f-9bc9-e6f48e7350bd
-

சென்னை: அனைத்­துத் துறை­களும் தமிழகத்தில் நல்ல வளர்ச்சி காணவேண்டும் என்­பதே மாநில அர­சின் முக்­கிய நோக்­க­மாக உள்­ள­தா­கக் கூறிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், குறிப்­பாக, சிறப்­பான செயல்­பா­டு­க­ளால் விளை­யாட்­டுத் துறை­யில் மறுமலர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

உலகமே வியந்து பார்க்கும் வகையில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அடுத்ததாக டென்னிஸ் போட்டி என அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் பல்­வேறு அனைத்­து­ல­கப் போட்­டி­கள் நடை­பெற உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

அனைத்­து­லக, தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர், வீராங்­க­னை­களுக்கு ஊக்கத்தொகை வழங்­கும் விழா சென்னை நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கில் நேற்று நடை­பெற்­றது.

இவ்­வி­ழா­வில், பதக்கங்களை வென்ற 1,130 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 16 கோடியே 28 லட்சத்து 25,000 ரூபாய்க்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர் பேசிய முதல்வர், "விளை­யாட்­டுத் துறை­யில் தமி­ழ­கம் முதன்மை பெற­வேண்­டும். பதக்­கங்­களை வென்று தமிழ்­நாட்­டுக்குப் பெருமை சேர்க்­க­வேண்­டும்," என்று விளை­யாட்டு வீரர்­க­களுக்கு வேண்­டு­கோள் விடுத்தார்.

பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­க­ளான சிலம்­பம், கபடி, ஜல்­லிக்­கட்டு ஆகி­ய­ போட்டிகளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­று கூறி­ய முதல்வர், அரசின் சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டுத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது எனக் கூறினார்.