ஆரோவில் பகுதியில் இருபது பழமையான சிலைகள் சிக்கின

ஆரோவில் பகுதியில் இருபது பழமையான சிலைகள் சிக்கின

1 mins read
a2b10365-4554-4432-9f91-5c7b6af83ef8
மீட்கப்பட்ட 20 சிலைகளில் இச்சிலைகளும் அடங்கும். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

புதுவை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்­தும் கடத்­தப்­பட்ட பழ­மை­யான கலைப்­பொ­ருள்­கள் உள்­ளிட்ட 20 சாமி சிலை­களை புதுச்­சே­ரியை ஒட்டி அமைந்­துள்ள தமி­ழ­கப் பகு­தி­யான ஆரோ­வில்­லில் இருந்து சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் நேற்று கைப்­பற்­றி­னர்.

ஆரோ­வில் பகு­தி­யில் உள்ள 'ஆரோ ரச்­சனா' என்ற கடை­யில் பழங்­கா­லச் சாமி சிலை­கள், மரச் சிற்­பங்­கள், தஞ்­சா­வூர் ஓவி­யங்­கள், பழ­மை­வாய்ந்த கைவி­னைப் பொருள்­கள் விற்­பனை செய்­யப்­படு­வ­தாக கும்­ப­கோ­ணம் சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரிவு அதி­காரி­ க­ளுக்கு தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, குறிப்­பிட்ட கடையில் சோதனை நடத்­திய அதி­கா­ரி­கள், அங்­கி­ருந்து விநா­ய­கர், முரு­கன், ஐயப்­பன், புத்­தர் என கற்­கள், உலோ­கம், மரத்தாலான 20 சிலை­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

இது­கு­றித்து, சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரி­வின் ஐ.ஜி. தின­க­ரன் கூறு­கை­யில், "தமி­ழக சிலை­க­ளைப் பிரான்ஸ் நாட்­டுக்கு கடத்­திச் செல்ல திட்­டம் தீட்­டி­யி­ருந்த நிலை­யில், பழங்­கா­லச் சிலை­க­ளைப் போல் இருந்­த­தால் அவற்றை எடுத்­துச்­செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அனைத்து சிலை­க­ளை­யும் கும்­ப­கோ­ணம் கூடு­தல் முதன்மை நீதித்­துறை நடு­வர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி உள்­ளோம். விசா­ரணை நடந்து வரு­கிறது," என்று தெரி­வித்­தார்