நெல்லை: நெல்லை பருத்திப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகள் கடந்த சில மாதங்களாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்து வருகிறார்.
இந்தப் பாதிப்புக்கு அவருக்கு போடப்பட்ட கொரோனா தடுப்பூசியே காரணம் என்று மகாராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையும் உறவினர்களும் மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணுவிடம் மனு அளித்தனர்.
கடந்த மார்ச் மாதம் என் மகள் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. எனது மகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாத நிலையிலும், 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவளை கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட வைத்துள்ளனர்.
அதன்பிறகு பாதிப்புக்கு ஆளான என் மகள் இப்போது ஆபத்தான கட்டத்திற்கு வந்துவிட்டாள் என புகார் மனு அளித்துள்ளனர்.

