சென்னை: கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இந்த மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 300 படுக்கைகள் உள்ளன.
சளிக்காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகவும் இதனால், படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சென்னையிலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக் கான உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. இதேபோல வெளிநோயாளிகள் பிரிவிலும் வழக்கத்தைவிட 25 விழுக்காட்டினர் கூடுதலாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
சளி, இருமல், காய்ச்சல் ஆகியன குழந்தைகளுக்குப் பரவுகின்றன. காய்ச்சல் மூன்று அல்லது நான்கு நாள்களில் குறைந்தாலும், இருமல் குறைந்தது இரு வாரங்களுக்கு நீடிக்கிறது. எந்த வகைக் கிருமியால் இவர்கள் பாதிக்கப்படு கின்றனர் என்பது மர்மமாக உள்ளது.
மருந்து கொடுத்தாலும் இருமல் எளிதில் அடங்கவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் வேகமாகப் பரவுவதற்கு வானிலை மாற்றமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளில் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; வெளியே நடமாடாமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்ற நடைமுறைகள் விதிக்கப்பட்டு இருந்ததால் அந்தக் காலகட்டங்களில் காய்ச்சல் பரவலுக்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து இருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இதனால் கிருமிகள் வேகமாகப் பரவும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
பல்வேறு கிருமிகள் தற்போது பரவிவருவதாகவும் இதனால் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டைவறட்சி ஆகியன ஏற்
படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

