13 வயதில் குழந்தை: சிறுமியைச் சீரழித்த முதியவருக்கு 23 ஆண்டு சிறைத் தண்டனை

13 வயதில் குழந்தை: சிறுமியைச் சீரழித்த முதியவருக்கு 23 ஆண்டு சிறைத் தண்டனை

2 mins read
3ceba3a5-7194-4a01-bafd-b8d1377527d9
-

வேலூர்: பாலி­யல் பலாத்­கா­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட 13 வயது சிறு­மிக்கு குழந்தை பிறந்த கொடூரச் சம்பவத்தில் 75 வயது முதி­ய­வ­ருக்கு 23 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராணிப்­பேட்டை மாவட்­டம் கீழ்­வி­ஷா­ரம் பிள்­ளை­யார் கோயில் தெரு­வைச் சேர்ந்­த­வர் ஏ. அன்­வர் பாஷா, 75. இவர் அலு­மி­னி­யப் பொருள் வியா­பாரி.

இவருக்கு தந்­தையை இழந்த 13 வயது சிறு­மி ­ஒருவருடன் பழக்­கம் ஏற்­பட்­டது. சிறு­மியை அவ்­வப்­போது கடைக்கு அழைத்துச் சென்று தின்­பண்­டங்­களை அவர் வாங்கிக் கொடுத்­துள்­ளார்.

சிறு­மியை ஆள்­ந­ட­மாட்­டம் இல்­லாத இடத்­துக்கு அழைத்துச் சென்ற அன்­வர் பாஷா பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தார். சுமார் ஐந்து மாதங்­க­ளுக்­கும் மேலாக இந்த கொடூ­ரம் நீண்டு இருக்­கிறது. இதனால் சிறுமி கர்ப்­பி­ணி­யா­னார்.

கடந்­தாண்டு சிறு­மிக்கு ஆண் குழந்தை பிறந்­தது. அவரை அன்­வர் பாஷா பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தது சிறு­மி­யின் தாயா­ருக்கு அப்­போ­து­தான் தெரி­ய­வந்­தது. இது­கு­றித்து அவர் ராணிப்­பேட்டை அனைத்து மக­ளிர் காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­தார்.

அதன்­பே­ரில் போக்சோ சட்­டத்­தில் அன்­வர் பாஷா­வைக் கைது செய்த காவல்துறையினர் அவரை வேலூர் சிறை­யில் அடைத்­த­னர். இந்த வழக்கு விசா­ரணை வேலூர் சிறப்பு நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது. விசா­ரணை முடி­வில் தீர்ப்­ப­ளித்த நீதி­பதி சி. கலைப்­பொன்னி, சிறு­மியை கடத்­தி­ய­தற்­காக அன்­வர் பாஷா­வுக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னை­யும் 'போக்சோ' சட்­டத்­தின்­கீழ் 20 ஆண்டு கடுங்­கா­வல் சிறைத் தண்­ட­னை­யும் ₹10 ஆயி­ரம் அப­ரா­த­மும் விதித்து உத்­த­ர­விட்­டார். இதை­ய­டுத்து அன்­வர் பாஷா வேலூர் சிறை­யில் அடைக்கப்பட்டார்.