சிறாரை நல்வழிப்படுத்த 'சிற்பி' திட்டம் தொடக்கம்

சிறாரை நல்வழிப்படுத்த 'சிற்பி' திட்டம் தொடக்கம்

1 mins read
599ad8ae-f3ab-444a-ad3e-2cdc4dd2f6bc
-

சென்னை: மாணவ, மாண­வி­யரை நல்­லொ­ழுக்­கம் மிக்­க­வர்­க­ளாக மாற்­றிக் காட்­டும் வகை­யில் சிற்பி என்­னும் திட்­டத்தை தமி­ழக அரசு உரு­வாக்கி உள்­ளது.

முதல்­வர் மு.க. ஸ்டா­லின் நேற்று இந்­தத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

அப்­போது அவர் பேசு­கை­யில், "சிறு­வர்­களை இள­மைக்­கா­லம் முதலே பொது ஒழுக்­கம் உள்­ள­வர்­க­ளா­க­வும் சமூ­கப் பொறுப்­புள்­ள­வர்­க­ளா­க­வும் ஆக்க 'சிற்பி' திட்­டம் பயன்­படும் என்­ப­தில் எந்­த­வித ஐய­மும் இல்லை.

"சிறார் குற்­றங்­க­ளைக் கட்­டுப்­

ப­டுத்­து­வ­தில் தமிழ்­நாடு காவல்­துறை சிறப்­புக் கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கிறது.

"சிறார் குற்­றச் செயல்­களில் ஈடு­பட, குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் கவ­னக்­கு­றைவு, போதிய குடும்ப வரு­மா­னம் இல்­லாமை, ஆத­ர­வில்­லா­மல் சிறார்­கள் வளர்­வது, வேலை­வாய்ப்­பின்மை போன்­றவை பெரும்­பா­லும் கார­ண­மாக அமை­கின்­றன.

"'சிற்பி' செயல் திட்­டத்­திற்­குத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ள 100 பள்­ளி­களில் எட்­டாம் வகுப்பு பயி­லக்­கூ­டிய 2,764 மாண­வர்­களும் 2,236 மாண­வி­களும் தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

"ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் இரு ஒருங்­கி­ணைப்பு அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்," என்றார் ஸ்டாலின்.