ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு, என்இபிசி, கிங்ஃபிஷர், ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேரமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. அவற்றின் விமானங்கள் எதுவும் விமானநிலையத்தில் இல்லை. இருப்பினும் செயல்பாட்டில் இல்லாத என்இபிசி, கிங்ஃபிஷர், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்
படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் வடமேற்குப் பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு விமானங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றன. எஞ்சிய விமானங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

