நாமக்கல்: கொங்கு மண்டலத்தில் அரசியல் சுற்றுப்பயணம் செய்து
வரும் வி.கே.சசிகலா சேலம் மாவட்டத்தைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்குச் சென்றார்.
அங்கு அவருக்கு ஆயிரக்
கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார வேனில் அமர்ந்தபடி பேசிய சசிகலா "அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டதுதான் திமுக அரசின் சாதனை. அதிமுகவை மீட்பதுதான் எனது முழுப் பணி.
"வரலாறு உள்ள வரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களை யாரும் மறக்க முடியாது," என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும்.
"கழகத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் எனக்கு முக்கியம்.
"'ஜெயலலிதாவைப்போல் இவரை நம்பினால் கண்டிப்பாக செய்வார்' என்ற என்மீதான நம்பிக்கை எல்லா ஊர் மக்களிடமும் தெரிகிறது.
"தேர்தல் அறிக்கையில் வாக்கு றுதி அளித்த எதையும் திமுக நிறைவேற்றவில்லை. மின் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கக்கூடியது. 63 விழுக்காட்டினர் 200 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்களாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றார் சசிகலா.

