'மணப்பெண் தேவை' என இளையர்கள் வினோதப் பிரசாரம்

'மணப்பெண் தேவை' என இளையர்கள் வினோதப் பிரசாரம்

1 mins read
9b8f0d40-e60e-4ab6-9035-7bc5a23bd34e
மண­ம­கன்­ கோலத்­தில் வர­தட்­சணைக் கொடுமை, வர­தட்­சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்­டத்­தின் பல்­வேறு இடங்­களிலும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி வரு­ம் பட்டதாரி வாலிபர்கள் ஜெனிஷ், சுமிஷ். படம்: தமிழக ஊடகம் -

நாகர்­கோ­வில்: பட்டதாரி இளையர் இருவர் வரதட்சணையை எதிர்த்து பொதுமக்கள் மத்தியில் நூதனமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

"வரதட்சணை எதுவும் நாங்கள் வாங்கமாட்டோம்; கார், தங்­கம், பணம் எதுவும் எங்களுக்குத் தேவை­யில்லை," என்ற அவர்களது அறிவிப்பை வாசித்த பொதுமக்களில் சிலர் பாராட்டிச் சென்றனர்.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், வில்­லுக்­குறி பகு­தியைச் சேர்ந்­தவர்கள்­ ஜெனிஷ், 25, சுமிஷ், 25. நண்பர் களான இருவரும் பட்டு வேட்டி, சட்டையுடன் மண­மகன்கள் கோலத்­தில் கையில் 'மணப்பெண் தேவை' என்ற விளம்­பரப் பதாகையுடன் நாகர்­கோ­வில் பேருந்து நிலை­யத்­தில் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் பிடித்திருந்த பதாகை யில் வர­தட்­ச­ணை­யாக கார், தங்­கம், பணம் தேவை­யில்லை என்­றும் சாதி, மதம் தேவை­யில்லை என்­றும் குறிப்­பிட்டு இருந்தனர்.

அத்துடன், பேருந்து நிலையம் வந்த இளையர்கள், கல்­லூரி மாண­வர்­க­ளி­டம் வர­தட்­சணை கேட்­கா தீர்கள், பணத்தைவிட குணத்தைப் பார்த்து பெண்ணைத் தேர்ந்­தெ­டுங்­கள் என­வும் அறிவுறுத்தினர்.

"சாதாரணமாக வர­தட்­சணை வாங்காதீர்கள் என முழக்கமிட்டு பிரசாரம் செய்தால் பொதுமக்கள் கேலி செய்வதுண்டு. ஆனால், மணமகன் கோலத்தில் எங்களது இந்த விழிப்புணர்வு முயற்சி சமூ கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது," என ஜெனிஷ், சுமிஷ் கூறியுள்ளனர்.