கைக்குழந்தைக்கு மது புகட்டிய போதைப்பெண்

கைக்குழந்தைக்கு மது புகட்டிய போதைப்பெண்

1 mins read
94e37bfe-1b2e-4599-b398-209bc8183de3
-

திண்­டுக்­கல்: திண்­டுக்­கல் பேருந்து நிலை­யத்­தில் கைக்­கு­ழந்­தைக்கு மது புகட்­டிய போதைப் பெண்­ணி­டம் இருந்து குழந்­தையை மீட்ட காவ­லர்­கள், அதனை உட­ன­டி­யாக திண்­டுக்­கல் அரசு மருத்­துவமனை யில் சேர்த்­த­னர்.

குழந்­தையைப் பெண்­ணி­டம் இருந்து காவ­லர்­கள் மீட்­ட­போது, அவர் மடி­யில் மறைத்து வைத்­தி­ருந்த மதுபோத்­தல்­கள் கீழே விழுந்தன. குழந்தை தன்­னு­டை­யது தான் என்று கூறிய அப்­பெண் மது­போ­தை­யில் சாலை­யில் படுத்­துப் புரண்­டார்.

இதை­ய­டுத்து அங்கு விரைந்து வந்த பெண் காவ­லர்கள், பெண்­ணிடம் இருந்து குழந்­தையை மீட்­ட­னர். பெண் காவ­லர்கள் குழந்­தையை பார்த்­த­போது அது மயக்­கத்­தில் இருந்­தது தெரி­ய­வந்­தது. இதைத்­தொ­டர்ந்து குழந்­தையை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்து முத­லு­தவி சிகிச்சை அளித்­த­னர்.