உயர் நீதிமன்றம்: 10 ஆண்டு சிறைத் தண்டனை சரியானதே

உயர் நீதிமன்றம்: 10 ஆண்டு சிறைத் தண்டனை சரியானதே

1 mins read
ea087332-975c-4310-ad16-419b679ac4e8
-

கோவை: கஞ்சா குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை சரியானதே, அதில் குறுக்கிடத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மேல்­முறை­யீட்டு மனுக்­க­ளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், சீர­நா­யக்­கன்­பாளை­யம் பகு­தி­யில் 2018ல் காரில் 216 கிலோ கஞ்சா கடத்­திய நான்கு பேரை ஆர்­எஸ் புரம் காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

கோவை சிறப்பு நீதி­மன்­றம், இரு­ளாண்டி, தர்­மர், பந்­தீஸ்­வ­ரன், சதீஸ்­கு­மார் ஆகி­யோ­ருக்­குத் தலா 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­ விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இத்தண்­ட­னையை எதிர்த்து நால்­வ­ரும் உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­த­னர்.

இந்நிலையில், மனுக்­களை விசா­ரித்த நீதிபதி பரத சக்­க­ர­வர்த்தி, "கைப்­பற்­றப்­பட்­டது தடை செய்­யப்­பட்ட கஞ்சா என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. கோவை நீதி­மன்­றம் குறைந்தபட்ச தண்­ட­னையே விதித்­துள்­ளது. இதில் குறுக்கிடத் தேவை யில்லை," என தீர்ப்பளித்தார்.