சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவரும் நிலையில், "திமுக அரசு தன் கடமையைச் செய்கிறது. இதில் எந்தத் தவறும் இல்லை," என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தாங்கள் நிரபராதி என நிரூபிக்கவேண்டியது குற்றம்சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு," என்றார்.
"நான், ஜெயலலிதா அம்மா வோடு 21 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றியவன். அவர்களின் வாக்குதான் வேதவாக்கு. ஏழை-எளிய மக்களுக்காக, தொண்டர்களுக்காக உருவாக் கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. அதனைக் காப்பாற்றுவதற்காகத் தான் நாங்கள் போராடிக்கொண் டிருக்கிறோம்," என்று கூறினார்.
"திமுக அரசு உங்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை.

